Tuesday, November 2, 2010

யுவனின் மெலடி மெட்டுக்கள்

இப்போதெல்லாம் அதிகமாக கேட்டு ரசிப்பது யுவனுடைய இசைதான்... இளைய ராஜாவுடைய வாரிசு என்பதை நிரூபிக்கிறார் ... 'பையா' பாடல்கள் எல்லாம் மிக அருமை... லேட்டஸ்ட் ஹிட் 'நான் மகான் அல்ல' படத்திலுள்ள 'இறகை போலே அலைகிறேனே உந்தன் பேச்சை கேட்கையிலே'... 'பையா'விற்கு முன்னாடி 'கோவா'ல இருந்து 'இதுவரை இல்லாத உறவிது' பாடல்... அதுவும் யுவனோட குரலில் வரும் சோகப்பாடல் வெர்சன் உண்மையாகவே அருமையான ஒரு மெலடி மெட்டு... இதே வரிசையில 'வாமணன்' படத்தில இருந்து 'ஒரு தேவதை பார்க்கும் நேரமிது மிக அருகினில் இருந்தும் தூரமிது', என்ன ஒரு மெலடி... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு அது... அதுவும் வட இந்திய பிரபல பாடகர் 'Roop Kumar Rathod' குரல் மிக மிக அருமை. எப்படி சரியாய் அவரை பிடித்து பாட வைத்தார் யுவன், என வியப்பாய் இருந்தது... 'சிவா மனசில சக்தி (SMS)' ல இருந்து 'ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக் கொண்டால் காதல்' என்ன ஒரு இதமான இசை...


நடிகர்கள் புதிது என்பதால் அல்லது பிடிக்காத நடிகர்கள் என்பதால் அல்லது பிளாப் ஆனதால் அல்லது இன்னபிற காரணங்களினால் பாக்க முடியாத படங்களின் பாடல்களும் நல்லா இருக்கு; அந்த வரிசையில் 'குங்கும புறாவும் கொஞ்சு புறாவும்', 'பானா', 'யாரடி நீ மோகினி', 'தீராத விளையாட்டு பிள்ளை', 'யோகி', 'சர்வம்'... அட எல்லாமே நல்லா இருக்குப்பா... யுவனின் அசாத்திய திறமையை இது காட்டுகிறது... என்ன, கொஞ்சம் நல்ல படத்திற்கு, நல்ல டீம்முடன் யுவன் தேர்ந்தெடுத்து வேலை செய்தால் நன்றாய் இருக்கும்...


என் மனதில் என்றும் இசைவாடிக் கொண்டிருக்கும் யுவனின் ஒரு (கொஞ்சம் பழைய) பாடலின் வரிகள் இதோ:

"நட்பினிலே நட்பினிலே பிரிவு என்பது ஏதோமில்லை

நட்பினிலே நட்பினிலே பிரிவு என்பது ஏதோமில்லை

என் மனமும், உன் மனமும் பேச வார்த்தைகள் தேவை இல்லை

உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே ஆயிரம் என்னங்கள் ஓடுதடி

அத்தனையும் அத்தனையும் உந்தன் பார்வை தேடுதடி

எத்தனை நாள் எத்தனை நாள் இப்படினான் வாழ்ந்திருப்பேன்

நீயும் இல்லை என்று சொன்னால், எந்த நிழலில் ஓய்வெடுப்பென்... ஓஓஊ"

['காதல் கொண்டேன்' படத்திலிருந்து]


நண்பர்களுக்கு பிடித்த யுவனுடைய பாடல்களை இங்கே வரிசைப்படுத்தலாமே...

7 comments:

  1. யுவனின் மெலடி மெட்டுக்கள் அருமை

    :))

    ReplyDelete
  2. இறகை போலே அலைகிறேனே//

    இந்த பாடலின் இசை மிகவும் ரம்யமானது

    ReplyDelete
  3. 'காதல் கொண்டேன்' எல்லா பாட்டும் அருமை.
    மிகவும் பிடித்தது தேவதையை கண்டேன்...

    ReplyDelete
  4. சுவாரஸ்யமான பதிவு..! நீங்கள் குறிப்பிட்ட பாடல்வரிகள் என்னுள்ளும் இப்பொழுது ஒலிக்கிறது. அதுதான் இசையின் சக்தியோ..!!!??

    ReplyDelete
  5. இளைய இசைஞானி யுவன் மெலடி மெட்டுக்கள்பற்றி
    அருமையாக எழுதியுள்ளீர்கள்
    அவர் பாடிய பாடல்களைமட்டும் யுவன் வாய்ஸ் ஹிட்ஸ் என்று தனியாகவே சேகரித்து வைத்துள்ளேன்
    இப்போதெல்லாம் அவர் இசையமைக்கும் படத்தில் தனது தந்தையைப்போலவே ஒரு பாடலாவது பாடிவிடுகிறார் அதுவும் செம ஹிட்டாகிவிடுறது
    பாடுவதில் அவருக்கென்று தனி கிரியேட்டிவிட்டியுடன் பாடுவதால் அனைவரையும் கவர்ந்துவிடுகிறார் அதுதான் அவரது தனித்தன்மை

    நம்ம ஆல்டைம் ஃபேவரைட் ”'சிவா மனசில சக்தி (SMS)' ல இருந்து 'ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக் கொண்டால் காதல்' என்ன ஒரு இதமான இசை... இந்த பாடல்தான் தினமும் ஒருமுறையேனும் கேட்காமல் இருந்ததில்லை...

    பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  6. உங்கள் பதிவினை தொடருங்கள் எஸ்.வி

    ReplyDelete
  7. யுவனின் இசை மிகவும் பிடிக்கும்....

    தீபாவளி படத்தில்....போகாதே பாடல்.....! கேட்பவர்களை உருகவைத்து விடும்.

    ReplyDelete