Monday, December 20, 2010

பொய்யா மெய்யா....



இளங்காலை தென்றல் காற்று
நண்பகல் அனல் ஞாயிறு
அந்திநேர பகலடையும் கடற்கரை

முன்னிரவு பவுர்ணமி நிலவு
பின்னரவு அமாவாசை படுக்கையறை
விடியற்காலை வாசமீசும் மல்லி

அத்தனை மாறும் நிலையிலும்
மாறா என்னரகில் நீயோ
இவையனைத்தும் உன் நிலைகள்தானோ

பொய்சொல்ல புலவனல்ல ஞான்
மெய்யுரைய நீதிமானுமல்ல நான்
நின்முன் மெய்மறந்த அடியேன்...

-எஸ் வி

Wednesday, December 8, 2010

எதிர்பாரா அழைப்பு



நாம் பிரிந்த பல நாட்களுக்கு பிறகு 
வான்திரையில் முகிலெழுதுக்களால் 
நீ எழுதிய என் பெயர் 
கவனிக்காத சிறு பொழுதில் 
சுவடின்றி மறைவது போல 
வளியோடு கரைந்து விட்டு 
வலியோடு உறைந்திருந்த 
ஒரு முன்னிரவு பொழுதில் 
கடலடைந்த நீரின் மறுதலையாய்   
நீ என்னை தொடர்பு கொண்ட போதும் 
உனக்கு தேவையானதை 
என்னிடம் கேட்டு 
தெரிந்து கொண்ட போதும் 
நன்றி என கூறி 
தொடர்பை துண்டித்த போதும் 
என் குரலில் ஏற்பட்ட 
சிறு நடுக்கத்தை 
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை