Saturday, October 30, 2010

முதல் கவிதை...


அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!

அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள
அனைத்து காகிதங்களும் போதாது..!

என்னை பொறுத்தவரை
கடவுளை நான் நம்ப காரணமே
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைததற்க்காகதான்..!


நான் சொன்ன
முதல் வார்த்தை...

எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...

நாங்கள் அன்றே
சொன்ன முதல் கவிதை...

அம்மா..!!

13 comments:

  1. //காதலியை பற்றி எழுத ஒரு காகிதமும்
    சில பொய்களும் போதும்...!//

    :)

    //அம்மா உன்னை பற்றி
    எழுத உலகத்தில் உள்ள
    அனைத்து காகிதங்களும் போதாது..!//

    நிஜம்...கவிதை அருமை!

    ReplyDelete
  2. காதலியை பற்றி எழுத ஒரு காகிதமும்
    சில பொய்களும் போதும்...!


    அட!!!

    ReplyDelete
  3. என்னை பொறுத்தவரை
    கடவுளை நான் நம்ப காரணமே
    எதை எதையோ படைத்த அவன்
    அம்மாவையும் படைததற்க்காகதான்..!

    அருமை!!

    ReplyDelete
  4. சத்தியமான உண்மைங்க, ரொம்ப நல்லா இருக்குங்க, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ஈன்ற தாய்க்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை

    காதலியை பற்றி எழுத ஒரு காகிதமும்
    சில பொய்களும் போதும்...! - உண்மை தான்.

    ReplyDelete
  6. நம்புவோம்..

    ReplyDelete
  7. பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்

    ReplyDelete
  8. வாவ்.... சூப்பர் திலக்

    :))

    ReplyDelete
  9. முதல் தெய்வம் அம்மாதான்.
    அம்மா என்ற சொல்லே இனிமைதான்.

    ReplyDelete
  10. கவிதை இதம் :) வாழ்த்துக்கள் திலக்

    ReplyDelete
  11. பெண்மைக்கு மதிப்பு சேர்க்கும் ஒரே வார்த்தை: "அழகு" இல்லை, "இளமை" இல்லை "பெண்மை"யும் இல்லை!!! அந்த வார்த்தை "அம்மா" !

    அந்த அம்மாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக தங்கள் கவிதை அமைந்துள்ளது! வாழ்த்துக்கள்...

    ReplyDelete