Monday, December 20, 2010

பொய்யா மெய்யா....



இளங்காலை தென்றல் காற்று
நண்பகல் அனல் ஞாயிறு
அந்திநேர பகலடையும் கடற்கரை

முன்னிரவு பவுர்ணமி நிலவு
பின்னரவு அமாவாசை படுக்கையறை
விடியற்காலை வாசமீசும் மல்லி

அத்தனை மாறும் நிலையிலும்
மாறா என்னரகில் நீயோ
இவையனைத்தும் உன் நிலைகள்தானோ

பொய்சொல்ல புலவனல்ல ஞான்
மெய்யுரைய நீதிமானுமல்ல நான்
நின்முன் மெய்மறந்த அடியேன்...

-எஸ் வி

9 comments:

  1. கரு நன்றாக உள்ளது.சிறு பிழைகளை களையவும்.தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. அருமையான கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி எஸ்.வி

    ReplyDelete
  3. பொய்சொல்ல புலவனல்ல ஞான்
    மெய்யுரைய நீதிமானுமல்ல நான்
    நின்முன் மெய்மறந்த அடியேன்//
    கலக்கல் வரிகள்

    ReplyDelete
  4. நின்முன் மெய்மறந்த அடியேன்//

    nice

    ReplyDelete
  5. தூக்கலான வரிகள் நண்பரே ...

    ReplyDelete
  6. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. \\அந்திநேர பகலடையும் கடற்கரை//
    .
    ..அருமையான சொற்பிரயோகம்.

    ReplyDelete